Site icon Tamil News

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற திறக்கும் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது

கேளம்பாக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு நோன்பு நிகழ்ச்சியை திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் சமத்துவ நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நோன்பின் முக்கியத்துவம் மற்றும் நோன்பின் அவசியம் குறித்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எடுத்துரைத்து இஃப்தார் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமிய மதங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version