Site icon Tamil News

டொராண்டோவில் பெண்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்ட நபர்

TTC மற்றும் செயின்ட் கிளேர் அவென்யூவில் நடந்த தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக 25 வயது இளைஞனை டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலை அடுத்து மதியம் மூன்று மணியளவில் செயின்ட் கிளேர் சுரங்கப்பாதை நிலையத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும் சந்தேக நபரும் ரயில் நிலையத்திற்கு செல்லும் தெற்கு ரயிலில் ஒருவரையொருவர் நோக்கி நடந்து கொண்டிருந்த போது தாக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

பின்னர் சந்தேகநபர் பின்தொடர்ந்து சென்று மீண்டும் அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகின்றது.

பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றொரு பெண்ணைப் பின்தொடர்ந்தார், அந்த பெண் ரயிலில் செயின்ட் கிளேருக்கு வந்தபோது ரயில் வெளியேறியதும் தாக்கியதுடன், பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது.

சந்தேக நபர் பின்னர் சுரங்கப்பாதை நிலையத்தை விட்டு வெளியேறி TTC வெளியே உள்ள கட்டிடத்தின்  கீழ் பகுதிக்குள் நுழைந்து மூன்றாவது பெண்ணை அணுகி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மூன்றாவது பெண் 911 ஐ அழைத்து முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் சந்தேக நபர் அந்த இடத்தை விடடு ஓடியதுடன் , இரண்டாவது பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பொலிசார் கூறுகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் டொராண்டோவைச் சேர்ந்த ஜேசன் ஜாப்பன் என்பவர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக மூன்று பாலியல் வன்கொடுமைகள், இரண்டு தாக்குதல்கள் மற்றும் இரண்டு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 

Exit mobile version