Site icon Tamil News

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் அடக்குமுறை : ஐ.நாவிடம் வலியுறுத்தி போராட்டம்!

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் மோசமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், வசந்த முதலிகே உள்ளிட்டவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு இதற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் இருவர் உயிரிழந்தமைக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.

தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைக் கலைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரால் உபயோகிக்கப்படும் கண்ணீர்புகைக்குண்டுகள் காலாவதியானவை என்றும், விஷத்தன்மையுடையவை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

Exit mobile version