Site icon Tamil News

செட்டிகுளத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலையால் பரபரப்பு!

வவுனியா செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக உள்ள வீதியோரத்தில் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் மக்களே பூர்வீகமாக வாழ்ந்து வரும்  குறித்த பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version