Site icon Tamil News

கொழும்பு விமான நிலையத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் விமான நிலைய ஊழியர்களை பிடிக்க சிவில் உடையில் பாதுகாப்பு குழுவை நியமிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளிடம் இருந்து வரும் புகார்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லக்கேஜ் தூக்குபவர்கள், டாக்சி ஓட்டுனர்கள், தரகர்கள் என பலரால் சுற்றுலா பயணிகள் துன்புறுத்தப்படுவதாக அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதன்படி, இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கான அபராதத் தொகையை 25,000 ரூபாவில் இருந்து 100,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையமும், விமான நிறுவனமும் சிசிடிவி கேமரா அமைப்பை விரிவுபடுத்தவும், உரிய புகார்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க சிறப்பு சாளரத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளன.

Exit mobile version