Site icon Tamil News

கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறுகின்றது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 1 முதல் 4 வரை மற்றும் 7 முதல் 11 வரையான பகுதிகளில் நாளை மதியம் 12 மணிவரை குறைந்த அழுத்த நீர்விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உயர் நில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version