Site icon Tamil News

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் 10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது.

மின்சார சபையால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சீரமைப்பு பணிகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11மணி முதல் இரவு 9 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை நகர சபை அதிகாரப் பிரிவுகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்மலானை, கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version