Site icon Tamil News

கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான தகவல்

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 24 மணிநேர  நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 1-4 மற்றும் கொழும்பு 7-11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

கடுவெல மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், கொலன்னாவ நகர சபை பகுதி, வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Exit mobile version