Site icon Tamil News

கொழும்பில் ரயில் கழிவறைக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி  இருந்து பயணித்த விரைவு ரயிலின் கழிவறைக்குள் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் கைவிடப்பட்ட சிசு இரவு 7.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சிசு  கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version