Site icon Tamil News

கண்களை குளிரவைத்து தெப்பத்திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்  பிரசித்தி பெற்ற அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது 11 நாட்கள் நடைபெறும்

இவ்விழாவில் நேற்றைய தினம் இரவு தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்தபடி கந்த பெருமான் வள்ளி தெய்வானையுடன் தெப்பக்குளத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பக்தர்கள் அரோகரா என கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்,

பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Exit mobile version