Site icon Tamil News

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய இருக்கும் 40 உறுப்பினர்கள்!

)ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 40க்கும் அதிகமானவர்கள் விரைவில் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (29)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுத்த சில தீர்மானங்கள் மக்களுக்கு கஷ்டமாக இருந்தபோதும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின் பின்னர் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

எனவே வங்குராேத்து அடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப  ரணிவ் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என்பதை தற்போது அனைவரும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

அதனால் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 40க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் விரைவில் இணைந்துகொள்ள இருக்கின்றனர் என்றார்.

Exit mobile version