தேசிய மற்றும் இராஜதந்திர ஸ்திரதன்மைக்காக உள்ளூராட்சி தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடத்தவேண்டும் என பௌத்தசாசன செயலணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பௌத்தசாசன செயலணி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
அமைச்சர்கள் எண்ணிக்கையை 15ஆக மட்டுப்படுத்தவேண்டும் எனவும் அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர்களை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஆடம்பர பொருள் இறக்குமதியை நிறுத்தவேண்டும் எனவும் அந்த நிதியை தேர்தலிற்கு செலவிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.