Site icon Tamil News

உணவுப்பாதுகாப்பு நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு விவசாயத்துறையில் நிறைபேறான நடவடிக்கைகள் அவசியம்

இவ்வாண்டு இலங்கையின் உணவுப்பாதுகாப்பு நிலை ஓரளவு முன்னேற்றமடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி விமலேந்திர ஷரண் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை உணவுப்பாதுகாப்பு நெருக்கடியிலிருந்து இலங்கை முழுமையாக மீட்சியடைவதற்கு விவசாயத்துறையை அடிப்படையாகக்கொண்ட நிலைபேறான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர்  வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கை  முகங்கொடுத்திருக்கும் உணவுப்பாதுகாப்பின்மை அச்சுறுத்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் உணவுப்பாதுகாப்பு நிலை கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஓரளவு முன்னேற்றமடைந்திருக்கின்றது என்றும் விமலேந்திர ஷரண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க

Exit mobile version