Site icon Tamil News

இலங்கையில் 13 வயது சிறுமியுடன் காட்டுக்குள் வாழ்ந்த நபருக்கு நேர்ந்த கதி

புத்தளம் வீரபுர பிரதேசத்தில் காட்டுக்குள் 13 வயதான சிறுமியுடன் இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான நபரையே தாம் கைது செய்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரையும் பாடசாலை மாணவியான 13 வயது சிறுமியையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை சீருடையுடன் சிறுமி, ஆண்ணொருவருடன் காட்டுக்குள் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் கிரிபாவ-சோலேவெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சிறுமி ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றல் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபருக்கும் பாடசாலை மாணவிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளதுடன் பாடசாலை முடிந்த பின்னர், சிறுமி சந்தேக நபருடன் காட்டுக்குள் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவியை மருத்துவப்பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Exit mobile version