Site icon Tamil News

இலங்கையில் நகைக்கடையொன்றில் அதிர்ச்சி கொடுத்த பெண்

பொல்பித்திகம பகுதியிலுள்ள தங்க நகைக்கடையொன்றில் 61 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் அணியும் கடிகாரம் மற்றும் தங்க மோதிரம் என்பவற்றை வாங்கிக் கொண்டு உண்மையான ரூபா நோட்டுகளுடன் ஏழு போலி ஆயிரம் ரூபா நோட்டுகளையும் சேர்த்து வழங்கியதாக கூறப்படும் பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இப் பெண்ணிடமிருந்து 30 ஆயிரம் ரூபா போலி நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் இப்பெண் மிஹிரன்பிட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவர்.

சந்தேகநபரான பெண்ணுக்கு போலி ரூபா நோட்டுகள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 போலி ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் பொல்பித்திகம பிரதேசத்திலுள்ள தங்க நகை கடை உரிமையாளர் ஒருவரையும் கடந்த வாரம் பொல்பித்திகம பொலிசார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version