Site icon Tamil News

இலங்கையில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறதா?

இலங்கையில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்யப்படுவதாகவும், வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

எனினும் இந்த செய்திகள் வெறும் வதந்திகள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு, இதுபோன்ற தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதோ, தொலைபேசி அழைப்புகளை சேமித்து வைப்பதோ அல்லது வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிப்பதோ இல்லை என பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.

எனவே சமூக ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version