Site icon Tamil News

இலங்கையில் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் ஆஸ்திரேலியா

இலங்கையில் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்காக ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது.

ஆஸ்திரேலியா உட்பட 03 வௌிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சீனாவின் சினொபெக் (Sinopak), ஆஸ்திரேலியாவின் யுனைடட் பெட்ரோலியம் (United Petroleum) மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பாக்ஸ் (R M Parks) ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் தற்போது ஐஓசி இந்திய நிறுவனம் மட்டுமே பன்நாட்டு நிறுவனமாக எரிபொருள் சந்தையில் உள்ளது. இந்நிலையிலேயே மேலும் 3 வெளிநாட்டு நிறுவனங்கள் களமிறங்கவுள்ளன.

Exit mobile version