Site icon Tamil News

இலங்கையில் இன்புளுவன்சா காய்ச்சல் பரவும் அபாயம்

இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் நாடு முழுவதும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச அமைப்பு தொடர்பான இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதிக காய்ச்சல், தசைவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் சளி போன்றவை இந்நிலையின் அடிப்படை அறிகுறிகளாகும் என விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பிரியங்கர ஜயவர்தன கூறுகிறார்.

இதேவேளை, காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தின் கடந்த மூன்றரை மாதங்களில் எலிக்காய்ச்சலினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் நிபுணர் எரந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் குறித்த இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் எலிக்காய்ச்சலால் 15 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதோடு, 127 பேருக்கு குறித்த நோய் தொற்று பதிவாகியுள்ளதாகவும் இந்த 15 உயிரிழப்புகளில் 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் உள்ளடங்குவதாக வைத்தியர் தெரிவித்தார்.

 

Exit mobile version