Site icon Tamil News

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஆசிரியர் செய்த மோசமான செயல்

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தலா 12 லட்சம் ரூபா வீதம் பெற்றுக் கொண்டு பலரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  தெம்பருவெவ பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தங்காலை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் இணைந்து ஜப்பானில் வேலை  பெற்றுத் தருவதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் பெரும் எண்ணிக்கையானோரை ஏமாற்றி சுமார் ஒரு கோடி ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version