Site icon Tamil News

இலங்கைக்கான கப்பல்சேவை தொடர்பில் தமிழக பொதுப்பணிதுறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இம்மாத இறுதியில் தமிழகத்திற்கும் இலங்கைக்கும்  இடையே  குறைந்ததூர பயணிகள் கப்பல் போக்குவரத்து கப்பற்சேவை ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே குறைந்ததூர பயணிகள்  கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு சட்டமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை – தமிழ்நாடு பயணிகள் கப்பல்சேவை கப்பல்சேவை ஆரம்பிக்கப்பட்டால் இரு நடுகளிற்கு இடையில் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.

தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கைக்கு இதனூடாக பல்வேறு வரப்பிரசாதங்கள் கிடைக்கும் என்பதுடன், இலங்கை இந்திய வர்த்தக தொடர்பாடல்களும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version