Site icon Tamil News

இறக்குமதித்தடைகளை முற்றாக நீக்க முடியாது : பந்துல குணவர்த்தன!

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டவுனேயே இறக்குமதித்தடைகளை முற்றாக நீக்க முடியாது. அந்தளவிற்கு அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்ற இடம்பெற்ற போது அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டவுனேயே இறக்குமதித்தடைகளை நீக்க முடியாது. தடம் புரண்டுள்ள பொருளாதாரத்தை சற்று நகரத்தியுள்ளோம்.

அதற்கமைய இனிவரும் பயணங்களை மிகவும் அவதானத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். எனவே ஒரே சந்தர்ப்பத்தில் சகல இறக்குமதித் தடைகளையும் நீக்க முடியாது.

இன்னும் எமது அந்நிய செலாவணி கையிருப்பு போதுமானளவு அதிகரிக்கவில்லை. எனவே அந்நிய செலாவணி கையிருப்பு முகாமைத்துவம் உள்ளிட்டவை மத்திய வங்கியினால் படிப்படியாக முன்னெடுக்கப்படும். அதற்கமையவே இறக்குமதி கட்டுப்பாடுகள் , தளர்வுகள் குறித்த தீர்மானங்களும் எடுக்கப்படும்.

அதன் பின்னர் ஒவ்வொரு காரணிகள் தொடர்பிலும் ஆராய்ந்து , தேவைக்கேற்ப படிப்படியாகவே இறக்குமதி தடைகள் நீக்கப்படும் என்றார்.

Exit mobile version