Site icon Tamil News

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரைச் சேர்ந்தவர் ஜான் (60) என்பவரின் சிறுநீரக கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் செயலிழந்திருக்கிறது.அதன் பின் அவர் மாற்று அறுவை சிகிச்சைக்காகச் சிறுநீரகம் தானம் செய்பவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.மேலும் அவர் தனது குடும்பத்தார் யாரும் சிறுநீரக தானம் செய்ய விரும்பவில்லை. இதனிடையே அவரது மகள் டெலாய்னி (25) அவருக்கே தெரியாமல் சிறுநீரக தானம் செய்துள்ளார்.

தனக்கு யாரோ சிறுநீரக தானம் செய்கிறார்கள் என நினைத்து அவரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.அறுவை சிகிச்சைக்குப் பின்பு தனக்குச் சிறுநீரக தானம் செய்தது தனது மகள் தான் எனத் தெரிய வந்ததும் “கடவுளே, எனது மகளா எனக்குச் சிறுநீரகத்தைத் தானமாக வழங்கினாள் என்று அவர் கண்ணீர் மல்கக் கூறினார்.

மகளை ஆரத் தழுவி உச்சி முகர்ந்து வாழ்த்தினார்.அவர்களது வீடியோ இணைய தளத்தில் வைரலாகி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.“எனது தந்தை அவதிப்படுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் சிறுநீரக தானம் செய்ய முன்வந்தபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.அவருக்கே தெரியாமல் மருத்துவர்களை அணுகி சிறுநீரக தானத்துக்குத் தயாரானேன். ஒரே வீட்டில் தந்தையுடன் வசித்தாலும், நான்தான் அவருக்குச் சிறுநீரக தானம் வழங்குகிறேன் என்பதைக் கூறவில்லை.” என டெலாய்னி கூறியுள்ளார்.

Exit mobile version