Site icon Tamil News

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்திற்கு 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு!

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 50 அரச மருந்தக நிலையகங்களின்  26 இல் தேவையற்ற செலவுகள் அடங்கலாக பல்வேறு காரணங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிடுகின்றது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கையின் படி, இரத்தினபுரி,  ஸ்ரீ ஜயவர்தனபுர,  பண்டாரகம மற்றும் மொனராகலை ஆகிய நான்கு  அரச மருந்தகங்களில்  2020 ஆம் ஆண்டு  இலாபம் ஈட்டி இருந்த நிலையில்,  2021ஆம் ஆண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  தேசிய கணக்காய்வு அலுவலகம் அரச மருந்தக கூட்டுத்தாபன நிர்வாகத்திடம் வினவியிருந்தபோது  கொரோனா அச்சுறுத்தல் நிலவிய காலத்தில்  மருத்துவப் பொருட்கள் சேதம் மற்றும் காலாவதியானதே இழப்புக்கு முக்கியக் காரணம் என விளக்கமளித்துள்ளது.

 

Exit mobile version