Site icon Tamil News

அமெரிக்காவில் அதிர்ச்சி – 100 இளைஞர்களுடன் நடந்த விருந்தில் மர்ம நபரின் துப்பாக்கிசூடு/

அமெரிக்கா ஜோர்ஜியாவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் உள்ள டக்ளஸ் கவுண்டியில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் திடீரென விருந்து நிகழ்ச்சியில் இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டின்போது பெரியவர்கள் இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version