இலங்கை

தேர்தலை நடத்தாமல் ஆட்சியில் நீடிக்க மக்கள் வாக்கெடுப்பை நடத்த திட்டமிடும் ரணில்!

தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து ஆட்சியில் இருக்க மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளார் எனவும் இது முறையற்ற செயல் எனவும் சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

நாவல பகுதியில் நேற்று  (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “பொருளாதார ரீதியில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கிஇ தேர்தல் ஒன்று அவசியமில்லை என்று மக்களே குறிப்பிடும் நிலையை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் இன்றளவும் மக்கள் மத்தியில் கடும் விமர்சனம் காணப்படுகிறது.

தேர்தல் வேண்டுமா,  இல்லையா என்பதற்காக மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது முறையற்றது. ஜனாதிபதியின் முறையற்ற செயலுக்கு பொதுஜன பெரமுன பங்காளியாகுமா என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்”  என்றார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!