ஐரோப்பா

ஜெர்மனியில் உதவி பணம் பெறும் மக்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெற்று வருகின்றவர்களுக்காக அரசாங்கம் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, இனிமேல் சமூக உதவி பணம் பெறுகின்றவர்கள் வேலைக்கு சென்றால் விசேட நிதி உதவியை வழங்கப்படும் திட்டமிடப்பட்டுள்ளது.

உதவி பணம் பெற்றால் இந்த விசேட நிதி உதவியை பெறுவதற்கு கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டியது அவசியமாகும்.

ஜெர்மனியின் தொழில் அமைச்சர் வுபேட்டஸ் ஹைல் சமூக உதவி பணம் பெறுகின்றவர்களை வேலைக்கு செல்வதற்கு ஊக்குவிப்பதற்காக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.

சமூக உதவியை பெறுகின்றவர்களை வேலைக்கு செல்லுமாறு பணித்து, அவர்கள் வேலைக்கு செல்லாது விட்டால் அவரது சமூக உதவி பணத்தில் இருந்து 30 சதவீதமான பணத்தை இல்லாது செய்வது என்பதே சமூக உதவி திணைக்களத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!