இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடு நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கையில் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்தில் நிறைவேற்று சபை இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி அளித்துள்ளது. எனவே, இலங்கை இனியும் உலகில் வங்குரோத்தடைந்த நாடாக கருதப்படமாட்டாது. இலங்கையின் கடனை மறுசீரமைத்து வழமையான கொடுக்கல் வாங்கல்களை மீண்டும் […]