இலங்கை செய்தி

சொற்ப காலத்தில் இலங்கைக்கு வந்த 75 ஆயிரம் சுற்றுலா பயணிகள்!

  • April 11, 2023
  • 0 Comments

மார்ச் மாதத்தின் கடந்த 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 76 ஆயிரத்து 247 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 86 ஆயிரத்து 431 பேர் என குறிப்பிடப்படுகின்றது. அதில், 16 ஆயிரத்து 588 பேர் ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் என்பதுடன், ஏனையவர்கள் இந்தியா, ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ளதாக […]

இலங்கை செய்தி

இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்கின்றன – சர்வதேச இந்து இளைஞர் பேரவை கண்டனம்!

  • April 11, 2023
  • 0 Comments

இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்வது மிக வேதனை தருகிறது என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலையில் சிவ ஆலயம் அழிக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், குருந்தூர் மலையில் கம்பீரமாக விகாரை ஈரம்காயாது நிற்கிறது. ஆனால் இன்று வெடுக்குநாறி மலை கண்ணீர் வடிக்கிறது. எம் இனத்தின் முதுகெலும்புகள் இல்லா அரசியல் வாதிகளால் இற்றை வரை […]

இலங்கை செய்தி

மஹிந்த வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

டிசெம்பர் மாதத்துக்கு முன்னதாக சகல தேர்தல்களும் நடத்தப்படவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் திட்டத்தினை தடைகள் இன்றி முன்னெடுக்க முயற்சிக்கும் இலங்கை : புதிய குழு நியமனம்!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் எந்த தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதன்படி தடைகள் காரணமாக சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் இடை நிறுத்தப்படுவதை தவிர்ப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது. இதனை தவிர்ப்பதற்காக விசேட அதிகாரங்களுடன் விசேட பிரிவொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்குகள் மற்றும் கட்டமைப்பு வரையறைகளை அடைவதற்காக அரசாங்கம் இந்த விசேட பிரிவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.  

இலங்கை செய்தி

சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் டெப்புரோஸ் முச்சேனா இலங்கை வருகை!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் டெப்புரோஸ் முச்சேனா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் 28 ம் திகதி இடம்பெறவுள்ள அறிக்கை வெளியிடும் நிகழ்வில் டெப்புரோஸ் முச்சேனா கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமை நிலவரத்தை கருத்தில் கொள்ளும்போது நாட்டின் 22 மில்லியன் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தை அவர் தனது உரையிலும் இலங்கையில் பிரசன்னமாகியிருப்பதன் மூலமும் வலியுறுத்தவுள்ளார். சர்வதேச மன்னிப்புச்சபையின் பிராந்திய மனித உரிமைகள் தாக்கத்திற்கான மூத்த இயக்குநராக […]

இலங்கை செய்தி

முதல் தடவையாக இலங்கையை வந்தடைந்த உலகின் புதிய பயணிகள் விமானம்!

  • April 11, 2023
  • 0 Comments

உலகின் புதிய பயணிகள் விமானம் ஒன்று  இன்று (27) காலை முதல் தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான இந்த போயிங் 787-10 ரக விமானமே இவ்வாறு  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளது. அமெரிக்க போயிங் விமான உற்பத்தியாளரின் ட்ரீம்லைனர் விமானப் பிரிவின் கீழ் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் ஒரே நேரத்தில் 337 பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ரோல்ஸ் ரொய்ஸ் இன்ஜின்கள் மூலம் இயக்கப்படும் இந்த விமானம் 36 […]

இலங்கை செய்தி

பிரித்தானிய வாழ் இலங்கை தமிழ் பிரஜையை அதிரடியாக கைது செய்த இந்திய கடலோர காவல்படை!

  • April 11, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் அகதி நிலை கோரிய இலங்கை தமிழர் ஒருவர் இந்திய கடலோர காவல்படையினரால் தமிழக கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 39 வயதான  தமிழரே  இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கைதான தமிழ் பிரஜை இலங்கையை விட்டு அகதியாக வெளியேறி இலங்கைக்கு திரும்ப முடியாது என்ற நிபந்தனையுடன் நிரந்தர விசா பெற்று […]

இலங்கை செய்தி

நீதவானை கொலை செய்ய மாயாவியின் உதவியை நாடிய சட்டத்தரணி!

  • April 11, 2023
  • 0 Comments

சட்டத்தரணி ஒருவர் , ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரியவை சூனியம் செய்து கொலை செய்ய சூனியக்காரர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நிதி மோசடி தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையில் இருந்த போது அவருடன் பழகிய சூனியக்காரருக்கு , குறித்த சட்டத்தரணி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சூனியக்காரர் ஹொரண பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை செய்தி

இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!

  • April 11, 2023
  • 0 Comments

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்த சேவை இயக்கப்படும். காங்கசந்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க கடற்படையின் ஒத்துழைப்புடன் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். இந்த […]

இலங்கை செய்தி

யாழில் 27 வயதான இளைஞனின் உயிரை பறித்த விபத்து

  • April 11, 2023
  • 0 Comments

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்றின் மீது மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது, வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் […]

Skip to content