இலங்கை செய்தி

மதவாச்சி ரயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்பிற்கு மத்தியில் எரிபொருள் திருட்டு

  • April 11, 2023
  • 0 Comments

மதவாச்சி ரயில் நிலையத்தில் எரிபொருள் தாங்கியின் சீல்களை உடைத்து 6 லட்சத்து 11,550 ரூபாய் பெறுமதியான டீசல் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து சுமார் 1500 லீற்றர் டீசல் திருடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. 24 மணிநேர பாதுகாப்பு இருந்த போதிலும் எரிபொருள் திருடப்படுவது பிரச்சினைக்குரியது எனவும் கூட்டமைப்பு […]

இலங்கை செய்தி

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் நேற்று முன்தினம் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் […]

இலங்கை செய்தி

கொழும்பில் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கழிவகற்றல் கட்டமைப்பிற்குள் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். நோய்வாய்ப்பட்ட நிலையில் நகர சபை ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் மயக்கமடைந்ததை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள கழிவகற்றல் கட்டமைப்பின் பராமரிப்பு பணிகளுக்காக பிற்பகல் கொழும்பு நகர சபையைச் சேர்ந்த குழுவொன்று சென்றுள்ளது. இதன்போது குறித்த கட்டமைப்பிற்குள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் ஆஸ்திரேலியா

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்காக ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. ஆஸ்திரேலியா உட்பட 03 வௌிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சீனாவின் சினொபெக் (Sinopak), ஆஸ்திரேலியாவின் யுனைடட் பெட்ரோலியம் (United Petroleum) மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பாக்ஸ் (R M Parks) ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இலங்கையில் தற்போது ஐஓசி […]

செய்தி தமிழ்நாடு

காண்போர் கண்களை குளிரவைத்த மது எடுத்தல் விழா

  • April 11, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தின் காவல் தெய்வமாக வடக்குத் திசையில் கல்லனைக் கால்வாயின் கரையில் வீரமாகாளியம்மன் அருள்பாளித்து வருகிறார். இந்தக் கோவிலில் கடந்த புதன் கிழமை நவதானியங்களை முளைக்க வைத்து முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனையடுத்து இன்று மேற்பனைக்காடு கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்கள் நல்ல மழைப் பொழிவு வேண்டியும், இப்பகுதியின் பிரதான விவசாயமான தென்னை விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர் நலம் பெற வேண்டியும் மது […]

பெண்களால் இப்படியும் செய்ய முடியுமா?

  • April 11, 2023
  • 0 Comments

கோவை அருகே உள்ள பேரூர் ஆதீனம் திருக்கோவில் சுமார் 500 வருடம் பழமையானது.. சாந்தலிங்க பெருமானால் துவங்கப்பட்ட பெருமைக்குரிய இத்திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா வரும்  3 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில்  முதல் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில்,சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் முன்னலையி்ல் சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. இதையடுத்து, திருக்குடங்களுடன் யாகசாலையை வலம் வந்த சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க  […]

செய்தி தமிழ்நாடு

காண்போரை பிரம்மிக்க வைத்த முளைப்பாரி ஊர்வலம்

  • April 11, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டி பல்லவராயன் பத்தையில் அமைந்திருக்கும் ஸ்ரீ.அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ.வலம்புரி விநாயகர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுப்பட்டி பல்லவராயன் பத்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோட்டைக்காடு கன்னியான் கொள்ளை,  கடுக்காக்காடு பொதுமக்கள் பல்லவராயன் பத்தை விநாயகர் கோயிலில் […]

செய்தி தமிழ்நாடு

யானையால் பறிபோன இரு உயிர்கள்

  • April 11, 2023
  • 0 Comments

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்குட்பட்ட மாங்கரை பகுதியில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனிடையே யானையை விரட்ட முயன்ற போது மகேஷ் குமார்(36) என்பவரை எதிர்பாராத விதமாக யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை அவரது உடலின் அருகிலேயே சுற்றி திரிந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை […]

செய்தி தமிழ்நாடு

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள்

  • April 11, 2023
  • 0 Comments

கும்பேம்ருகசிரோத்பூதம் யாமுநார்ய பதாச்ரிதம் தேவராஜ தயா பாத்ரம் ஸ்ரீகாஞ்சீ பூர்ணமாச்ரயே தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயே மருவாரும் திருமல்லிவாழ வந்தோன் வாழியே மாசி மிருக சீரிடத்தில் வந்துதித்தான் வாழியே அருளாளருடன் மொழிசொல் அதிசயித்தோன் வாழியே ஆறுமொழி பூதூரர்க் களித்தபிரான் வாழியே திருவால வட்டம் செய்து சேவிப்போன் வாழியே தேமராசாட்டகத்கைச் செப்புமவன் வாழியே தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே திருக்கச்சிநம்பி இரு திருவடிகள் வாழியே. 1.3.23. இன்று வியாழக்கிழமை […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ச்சி – 100 இளைஞர்களுடன் நடந்த விருந்தில் மர்ம நபரின் துப்பாக்கிசூடு/

அமெரிக்கா ஜோர்ஜியாவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் உள்ள டக்ளஸ் கவுண்டியில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் திடீரென விருந்து நிகழ்ச்சியில் இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த துப்பாக்கிச் […]