இலங்கை செய்தி

இளம் பெண் சட்டத்தரணி சடலமாக மீட்பு

  • April 12, 2023
  • 0 Comments

இளம் பெண் வழக்கறிஞர் ஒருவரின் சடலம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெல்மடுல்ல புலத்வெல்கொடவில் உள்ள வீடொன்றில் இது இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய சட்டத்தரணியான துஷ்மந்தி அபேரத்னவின் சடலம் இன்று (31) காலை அவரது வீட்டின் படுக்கையறையிலுள்ள படுக்கையில் மீட்கப்பட்டதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு (30) முதல் சட்டத்தரணியின் கணவர் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணியின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். உயிரிழந்த சட்டத்தரணி நேற்று இரவு தனது […]

இலங்கை செய்தி

வலிந்து காணாமல் ஆகப்பட்ட உறவுகள் யாழில் போராட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆகப்பட்ட உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இடம்பெற்றது. இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இலங்கை செய்தி

இலங்கையில் பேருந்து கட்டணங்களில் திருத்தம்!

  • April 12, 2023
  • 0 Comments

பேருந்து பயண கட்டணம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது. இதற்கமைய 34 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாயாக குறைவடைந்துள்ளது.  

இலங்கை செய்தி

கோட்டாபய வீட்டருகே குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர்!

  • April 12, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அரகலய ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. இந்த நிலையில் அரகலய போராட்ட காரர்களால் இன்றும் போராட்டம் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்திலேயே மேலதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

எரிபொருள் விலை குறைப்பின் நலன்களை மின்சார பயன்பாட்டாளர்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

எரிபொருள் விலை குறைப்பின் நலன்களை மின்சார பயன்பாட்டாளர்களுக்கு வழங்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை எழுத்து மூலம் இலங்கை மின்சார சபையிடம்  முன்வைக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் நிலக்கரி விலை குறைவடைதல் எரிபொருள் விலை குறைவடைதல் மற்றும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிபொருள் விலை குறைக்கப்பட்டதனால் மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தினால் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா செய்தி

நாளை கூடும் நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம்

  • April 12, 2023
  • 0 Comments

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (1) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முற்பகல் 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அவரது அலுவலகத்தில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

18 வயது மாணவனால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த விபரீதம்!

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவன் செலுத்திச் சென்ற வேன் ஒன்று மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி காலி வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளுப்பிட்டி காலி வீதியில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், மாணவன் செலுத்திய வேனை நிறுத்துமாறு சைகை செய்துள்ளார்.இதன்போது மாணவனால் வேனைக் கட்டுப்படுத்த முடியாமல் கான்ஸ்டபிளை மோதியதில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

இலங்கை செய்தி

போலி ஆவணங்களை தயாரித்து காணியை விற்பனை செய்த நபருக்கு கடூழிய சிறை!

  • April 12, 2023
  • 0 Comments

போலி ஆவணங்களை தயாரித்து காணியொன்றை விற்பனை செய்த நபருக்கு 27 கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ரஞ்சன் லியனகே என்ற நபர் போலி ஆவணங்களை தயார் செய்து 47 அரை இலட்சம் ரூபாவுக்க காணியை விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து சிறைத் தண்டனையுடன் அபராதத்தையும் அறிவித்த நீதிபதி,  அபராதத் தொகையை செலுத்தாவிடின் மேலதிகமாக 6 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் […]

இலங்கை செய்தி

சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை : பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்!

  • April 12, 2023
  • 0 Comments

சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே இலங்கை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கிறது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்மக்களின் இனப்படுகொலை யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் தருணத்தில் இலங்கை தென்னாபிரிக்க பாணியை பின்பற்ற முயல்கின்றது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை விமர்சித்துள்ளது. தென்னாபிரிக்க பாணியை இலங்கை பின்பற்றினால் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் […]

இந்தியா செய்தி

யாழ் கடற்கரையில் திடீரென தோன்றிய சிவலிங்கத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிவலிங்கம் காணப்படும் இடத்தியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் […]