செய்தி

புதையல் தோன்ற முற்பட்ட எழுவர் கைது!

  • April 11, 2023
  • 0 Comments

குருநாகல்  நாகொல்லாகம பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 7 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மஹவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக  நாகொல்லாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில்  குறித்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது  மூலம் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை செய்தி

இலங்கையர் அனைவர்க்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள மலேசிய அரசாங்கம்!

  • April 11, 2023
  • 0 Comments

மலேசிய அரசாங்கம் , இலங்கைக்கு கூடுதலாக 10,000 வேலை வாய்ப்புகளை ஒதுக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 10,000 வேலை வாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்தப் புதிய ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் அண்மைய வேலை வாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு […]

இலங்கை செய்தி

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவிதற்கு GMOA தீர்மானம்!

  • April 11, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கை, ஊதிய உயர்வு என பல்வேறு காரணிகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,  பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக  கைவிடுவதற்கு  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை (16)  காலை 8 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் தொழில் வல்லுநர்கள் சங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

மடகஸ்கரில் இருந்து இலங்கை அழைத்துவரப்பட்ட கடத்தல்காரன்!

  • April 11, 2023
  • 0 Comments

மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட நந்துன் சிந்தக அல்லது “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா அல்லது “குடு சலிந்து” ஆகியோர் இன்று (15) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்கருக்குச் சென்றது. கடத்தல்காரகள் கென்யா மற்றும் இந்தியா ஊடாக இந்த நாட்டிற்கு வந்துள்ளனர். “ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” ஆகியோருடன் மேலும் ஆறு பேர் கடந்த 7ஆம் திகதி […]

இலங்கை செய்தி

இன்று ஓய்வு பெற்ற சாரதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ரயில்வே திணைக்களம்!

  • April 11, 2023
  • 0 Comments

நாடாளாவிய ரீதியில் இன்று பல தொழிற்சங்கள் போராட்டத்தை முன்னுஎடுத்துள்ள நிலையில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டி பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. தனியார் பேரூந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை , 10 அலுவலக ரயில் சேவைகள் இன்றைய தினம் இடம்பெறுவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான […]

இலங்கை செய்தி

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்களை அழைத்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆளும் தரப்பின் 14 உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தேர்தலை பிற்போட அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் முத்துறைகளுக்கும் இடையில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் ;இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கடந்த […]

இந்தியா செய்தி

இலங்கைக்கு கடன் உத்தரவாதத்தை வழங்கிய நான்கு நாடுகள்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை தொடர்பில் மேலும் நான்கு நாடுகள் சர்வதேச நாணயநிதியத்திற்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்தை வழங்கியுள்ளjதாக  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா பாக்கிஸ்தான் ஹங்கேரி குவைத் ஆகிய நாடுகள் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

நாமல் ஒரு புரொய்லர் கோழி; விமல் வீரவன்ஸ கடும் விமர்சனம்!

  • April 11, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் இறைச்சிக்கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது விமல் வீரவன்ச மேலும் கூறுகையில்,மக்கள் துன்பப்படும் வேளையில் பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் ராஜபக்ஷ கிரிக்கட் விளையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், நாமல் ராஜபக்ச  ரணிலைப் போன்று செயற்படுவது மாத்திரமின்றி […]

இலங்கை செய்தி

கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் !

  • April 11, 2023
  • 0 Comments

பிலியந்தலை சுவாரபொல வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கைகள் துணியால் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 27 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் சண்டையிட்ட அவர் தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (15) இடம்பெறவுள்ள நிலையில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை செய்தி

இலங்கையில் மேலதிக சேவையில் ஈடுபட்டுள்ள பேருந்துகள்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (15) தேவைக்கேற்ப தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத துறையினர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட்டுள்ளதால் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையும் பொது மக்களின் நலன்கருதி மேலதிக பேருந்துகளை […]