இலங்கை செய்தி

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தல்

  • April 11, 2023
  • 0 Comments

இந்நாட்டு மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும், இல்லையேல் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

டி.எஸ்சின் தத்துவத்தை செயற்படுத்திய சிங்கப்பூர் அபிவிருத்தியடைந்த நாடாக மாறியது என ஜனாதிபதி தெரிவிப்பு Mar 23, 2023 07:26 am

  • April 11, 2023
  • 0 Comments

மறைந்த பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் தத்துவத்தை நாம் ஒதுக்கினாலும்  பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார். எமது  நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட போதும் கடந்த 75 வருடங்களில் சில அரசியல் இயக்கங்களின் தீர்மானங்களினால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவுகள் எண்ணிலடங்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சுதந்திரச் சதுக்கத்தில்  நேற்று (22) நடைபெற்ற மறைந்த பிரதமர் […]

இலங்கை செய்தி

யாழ் வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த கரு பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் 22ம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த கரு தொடர்பில் ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த பெண் ஒருவர் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசலகூடத்தொகுதியில் வீசி இருக்கலாம் என நம்புகின்றோம். இந்நிலையில் மீட்கப்பட்ட கரு சட்ட […]

இலங்கை செய்தி

இலங்கையில் பால் மாவின் விலை குறைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் இறக்குமதி பால் மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பால் மா இறக்குமதியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். அதன்படி, 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை சுமார் 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், 400 கிராம் பால் மா பொதியின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த விலை குறைப்பை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமுல்ப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இணங்கிய 10 நிபந்தனைகள்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை கடன் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிய 10 நிபந்தனைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் ஜனாதிபதி குறித்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதன்படி குறித்த 10 நிபந்தனைகளும் பின்வருமாறு. 1. ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வழங்குதல். 2. ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். 3. அரசின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிதிப்பு. 5. 2025 […]

இலங்கை செய்தி

கல்கிஸ்சையில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி – சிக்கிய பெண்கள்

  • April 11, 2023
  • 0 Comments

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸ்சை பிரதேசத்தில் கல்கிஸ்சை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஆயுர்வேத மருத்துவ சேவை வழங்கும் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நிலையத்தின் முகாமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 45 […]

இலங்கை செய்தி

ஞானக்காவின் மகளுக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்

  • April 11, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடரான அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்திவரும் ஞானக்கா என்ற பெண்ணின் வீட்டில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும்  பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஞானக்காவின் மகளின் கணவர்  இந்தத்  திருட்டுச் சம்பவம் குறித்து அநுராதபுரம் தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். திருடப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகளின் பெறுமதி சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விசேட கோரிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மீண்டும் அழைப்பு விடுத்தார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதாவது ஒன்றிணையுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்தார். வேறு விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். – எனவும் ஜனாதிபதி கூறினார். அதேவேளை, நல்லாட்சியைப் பொறுத்தமட்டில், சர்வதேச நாணய […]

இலங்கை செய்தி

இலங்கை அரசியல் கட்சிகள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

  • April 11, 2023
  • 0 Comments

பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை இடைநிறுத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. உள்ளாட்சிசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது உறுதியாக தெரியாத நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட மட்டத்தில் நடைபெறும் பிரதான கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டாமென அமைப்பாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உட்பட மேலும் சில கட்சிகள் ஆலோசனை வழங்கியுள்ளன. எனினும், தேர்தல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் கிராமிய மட்டத்திலான கூட்டங்களை தொடர்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தேர்தலை நடத்ததவறிய அல்லது […]

இலங்கை செய்தி

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் எனக் கூறப்படும் சந்தேகநபர் கைது

  • April 11, 2023
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் எனக் கூறப்படும் சந்தேகநபரிடம் நொரோச்சோலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர் பூலச்சங்கேணி, கதிரவெளி, வாகரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தேசிய அடையாள அட்டை அல்லது பொலிஸ் அறிக்கை இல்லாத காரணத்தினால் சந்தேகநபர் புத்தளம் பகுதியில் உள்ள மடல் வாடி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு வாரங்களுக்கு விடுதலைப் புலிகள். அமைப்பில் இராணுவப் பயிற்சி பெற்று பின்னர் […]

You cannot copy content of this page

Skip to content