பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம்

  • April 11, 2023
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரானது எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம் ஆங்கிலத்தில் எண்டி – டெரரிசம்  எனக் குறிப்பிட்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்த சட்டமூலத்தை தயாரிப்பதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை செய்தி

இலங்கையில் மோட்டார் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனம் உட்பட உலோகங்கள்இ கேக்இ பிளாஸ்டிக்இ சீஸ்இ இறப்பர்இ மரச்சாமான்கள்இ சோப்புகள்இ காய்கறிகள்இ உள்ளிட்ட பொருட்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. நாட்டில் […]

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் 10 நிபந்தனைகளை அரசாங்கத்தால் செய்ய முடியும் – மைத்திரி!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஊழல் ஒழிப்பு சட்டம் வெகுவிரைவில் இயற்றப்பட வேண்டும். அரச ஊழல் மோசடியால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்தது என சர்வதேசம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள 10 […]

இலங்கை செய்தி

இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பானது தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்குப் பெரிதும் உதவும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின், கடன்சுமையை நியாயமான முறையில் பகிரும் கோட்பாட்டுக்கு அமைவாக இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அனைத்து வர்த்தக மற்றும் பல்தரப்புக் கடன்வழங்குனர்களும் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையின் கடன்நெருக்கடியை உடனடியாகவும், செயற்திறனாகவும் கையாள்வதற்கு அவசியமான நிதியியல் உத்தரவாதத்தை சீன […]

இலங்கை செய்தி

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தல்

  • April 11, 2023
  • 0 Comments

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 03ம் திகதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அன்றைய தினங்களில் இடம்பெறாது. அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான சந்திப்பை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் நிபந்தனைகளின் தமிழர்கள் புறக்கணிப்பு : கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் அதிருப்தி!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதியுதவி அளித்துள்ள நிலையில், இலங்கை நிறைவேற்ற வேண்டிய சில நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளது. இந்நிலையில், கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இந்த உதவி செயற்திட்ட […]

இலங்கை செய்தி

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக தலையிடுகிறோம் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

  • April 11, 2023
  • 0 Comments

இதுவரை வழங்கப்பட்ட பரிந்துரைகளுடன் மட்டுப்படுத்தாமல் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாகத் தலையிடப்போவதாகத் தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழுவின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடந்த 21ஆம் திகதி கூடியபோதே அதன் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் குழுவானது துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் மிகவும் முக்கியமான பணியாற்றும் குழு எனச் சுட்டிக்காட்டிய அதன் தலைவர், இதில் அடங்கும் பல்வேறு துறைகள் குறித்து எதிர்வரும் […]

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃப்பின் உதவியை நேர்மறையான கோணத்தில் நோக்குமாறு வர்த்தக பேரவை வலியுறுத்தல்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை நேர்மறையான கோணத்தில் நோக்குமாறும், மறுசீரமைப்புச்செயன்முறைக்கு அவசியமான ஆதரவை வழங்குமாறும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமும் இலங்கை வர்த்தகப்பேரவை வேண்டுகோள்விடுத்துள்ளது. அதுமாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியத்தினால் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டிருக்கும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு முன்னுரிமையளிக்குமாறு அப்பேரவை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் குறித்த பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் இடைநிறுத்தப்படும்பட்சத்தில் அதனை இலங்கையால் தாங்கிக்கொள்ளமுடியாது […]

இலங்கை செய்தி

கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் Crafting Ceylon வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட Crafting Ceylon ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. தொழில் அமைச்சு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவை இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. நாடளாவிய […]

இலங்கை செய்தி

சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்களை ஊக்குவிப்பது தொடர்பில் வங்கித் துறையுடன் பாராளுமன்ற விசேட குழு கலந்துரையாடல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்களை ஊக்குவிப்பது மற்றும் அவற்றில் காணப்படும் நிதிச் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக வங்கித்துறையுடன் கலந்துரையாடியது. இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் […]

You cannot copy content of this page

Skip to content