இலங்கை

இலங்கையில் மருந்து பொருட்களின் விலை குறைப்பு!

  • June 5, 2023
  • 0 Comments

மருந்துகளின் விலைகளை 15 வீதத்தினால் குறைவடையவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூன் 15ம் திகதி முதல் தேசியமருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலைகள் 15 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக ரூபாயின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையல், அரசாங்கம் மக்களுக்கு சாதகமான வகையில் பல மாற்றங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலகம்

ஒடிசாவில் மற்றுமொரு புகையிரதம் விபத்து!

கோரமண்டல் கடுகதி புகையிரதம் விபத்துக்குள்ளான ஒடிசாவின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு புகையிரதமொன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை வந்து பயணித்த கோரமண்டல் கடுகதி புகையிரதம், ஒடிசா […]

ஐரோப்பா

பெல்ஜியம் வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை!

  • June 5, 2023
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பெல்க்ரோட்டின் எல்லைப் பகுதியில், உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அங்கு பெல்ஜியம்,  உக்ரைனுக்கு ஆதரவாக வழங்கிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள   பெல்ஜிய ஒலிபரப்பு VRT, “பாதுகாப்பு மற்றும் தகவல் சேவைகள் அங்கு என்ன நடந்தது என்பதை உறுதியாக அறிய ஒரு ஆய்வு தொடங்கியது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆசியா

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர்! பரிதாபமாக உயிர் இழந்த 60 பச்சிளம் குழந்தைகள்

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, உணவு கிடைக்காமல் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த ஏறத்தாழ 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆசியாவில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நாடுகளில் சூடான் முக்கியமான நாடாகும். இங்கு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சியை இராணுவம் கைப்பற்றிய நிலையில் இவர்களுக்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே அதிகார போட்டி உருவாகியுள்ளது. அடுத்து யார் ஆட்சியாளர்களாக மாறப்போகிறார்கள் என்கிற போட்டியில் இரு தரப்பினரும் அவ்வப்போது சிறு சிறு மோதலில் […]

இலங்கை

சினிமா பாணியில் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட ஐவர் கைது!

முகத்திற்கு மிளகாய் தூள் வீசி தங்க ஆபரணங்களை கொள்ளையிடும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர்கள் ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை – பன்விலஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுக்கும் குறைந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உந்துருளிகளில் சென்று, வீதியில் செல்லும் பெண்களின் முகத்திற்கு மிளகாய் தூள் வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து தங்க ஆபரணங்கள், […]

அறிவியல் & தொழில்நுட்பம் ஆசியா

6 மாத பயணத்தை முடித்துவிட்டு பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

  • June 5, 2023
  • 0 Comments

6 மாத விண்வெளி பயணத்தை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள், 20 கிலோ எடையுள்ள ஆராய்ச்சி மாதிரிகளை கொண்டுவந்துள்ளனர். பெண்ணின் கரு முட்டை செல்கள், நுண்ணுயிர்கள், புல், நெற்பயிர்கள் போன்றவை விண்கலம் மூலம் டியாங்காங் ஆராய்ச்சி மையத்திற்கு 6 மாதங்களுக்கு முன் ஷென்ஜோ – 15 என்ற விண்கலம் மூலம் விஞ்ஞானிகள் அனுப்பி வைத்தனர். விண்வெளியில், புவியீர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாறுபட்ட சூழலில் இருக்கும் போது அவற்றின் பண்புகளில் நேரும் மாற்றங்கள் […]

உலகம்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் கொண்ட வான்பரப்பில் நுழைந்த விமானம் விபத்துக்குள்ளாகியது – நால்வர் பலி!

  • June 5, 2023
  • 0 Comments

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டிசியில் கட்டுப்பாடுகள் கொண்ட வான்பரப்பில் பறந்த தனியார் விமானமொன்றை போர் அமெரிக்கப் போர் விமானங்கள் துரத்திச் சென்ற நிலையில், குறித்த  தனியார் விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஸ்னா ரக விமானமொன்று  வேர்ஜீனியா மாநிலத்தில் இவ்வாறு வீழ்ந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது. டென்னஸி மாநிலத்தின் எலீஸாபெத்டவுன் நகரிலிருந்து  நியூயோர்க் நகரின் லோங் ஐலண்ட் பிராந்தியத்தை நோக்கி புறப்பட்ட குறித்த விமானம்,  தலைநகர் வொஷிங்டன் டிசியில் மிகுந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஏஐ தொழில்நுட்பத்தால் 4,000 பேர் வேலை இழக்கும் அபாயம்! ஆய்வறிக்கையில் வெளியான தகவல்

அமெரிக்காவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் 4 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. உலகில் நாள்தோறும் தொழில்நுட்பமும், தொழில்நுட்பம் சார்ந்த புதிய சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் மனிதர்களை போன்றே இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சாட்ஜிபிடி எனப்படும் இந்த தொழில்நுட்ப பயன்பாடு பல்வேறு துறைகளிலும் நுழைவதால் ஏராளமானோர் வேலையை இழக்க நேரிடும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் […]

வட அமெரிக்கா

உக்ரைனில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்காக குதிரை வண்டி சவாரியில் ஈடுபட்ட கனடிய தம்பதி

  • June 5, 2023
  • 0 Comments

போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் சிறுவர் சிறுமியருக்காக கனடிய தம்பதியினர் குதிரை வண்டி சவாரியில் ஈடுபட்டுள்ளனர்.கனடாவின் மானிடோபாவைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு இரண்டு வாரங்கள் குதிரை வண்டியில் சவாரி செய்துள்ளனர். உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த குதிரை வண்டி சவாரி மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆர்மன்ட் ஜெரோம் மற்றும் அவரது மனைவி கெல்லி ஆகியோர் இந்த சவாரியை மேற்கொண்டுள்ளனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட குதிரை வண்டியைக் கொண்டு இந்த தம்பதியினர் சவாரி செய்துள்ளனர்.ஜெரோமின் மனைவி கெல்லி ஓர் […]

இலங்கை

2 மாதங்களில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் சினோபெக் நிறுவனம்!

  • June 5, 2023
  • 0 Comments

இரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்கீடு  முறைமையை நீக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார் திவுலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைத்திருத்தம் முன்னெடுக்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாத இறுதியில் எரிபொருள் முன்பதிவை தாமதமாக்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் இரண்டு மாதங்களில்,  150 நிரப்பு நிலையங்களுடன் சினோபெக் நிறுவனம் விநியோக நடவடிக்கையை […]

You cannot copy content of this page

Skip to content