இலங்கையில் மருந்து பொருட்களின் விலை குறைப்பு!
மருந்துகளின் விலைகளை 15 வீதத்தினால் குறைவடையவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூன் 15ம் திகதி முதல் தேசியமருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலைகள் 15 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக ரூபாயின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையல், அரசாங்கம் மக்களுக்கு சாதகமான வகையில் பல மாற்றங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.