வெளிநாட்டில் இருந்து இலங்கை வநத தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிப்பு!
இலங்கையில் தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடொன்றிலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வந்தவர்களுக்கே இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனைகளின் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் ஐடிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாயின் கணவர் வெளிநாட்டில் இருந்த போது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.