இலங்கை

மேலும் ஒரு வரித் திருத்தம் விரைவில்

சட்ட வரைவு துறையால் தயாரிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் பல திருத்தங்களை அறிமுகப்படுத்தவும், அதற்கான திருத்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட வரைவு துறைக்கு ஆலோசனை […]

புகைப்பட தொகுப்பு

இதயத்தை புரட்டி போட்ட ஈழத் தமிழச்சி!!இந்த வயசுலயே இப்படி ஒரு தாராளம் காட்டும் இவரைத் தெரியுமா?

  • June 27, 2023
  • 0 Comments

  இலங்கை பெண்ணான மைத்ரேயி ராமகிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் 4.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துக்கொண்டுள்ளார்.[/caption] இவர் அமெரிக்கன் மற்றும் பிரிட்டிஷ் சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இலங்கை பெண்ணாக இருக்கும் மைத்ரேயி ராமகிருஷ்ணன் கனடாவில் குடியேறி ஒரு நடிகையாக மாறினார். இவங்க அம்மா அப்பா இலங்கையில போர் நடக்கும் போது கனடாவில் குடியேறி இருக்காங்க. மைத்ரேயி ராமகிருஷ்ணன் படித்து வளர்ந்தது எல்லாமே கனடாவில் தான். netflixஇல் இவங்க நடிச்ச அமெரிக்கன் காமெடி சீரிஸான நெவர் ஹேவ் ஐ […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் முடிவுக்கு வந்தது செவிலியர்களின் போராட்டம்!

  • June 27, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் செவிலியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்த போராட்டங்கள் நிறைவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் (RCN) கடந்த மாதம் அரசாங்கம் வழங்கிய சம்பள சலுகையை நிராகரித்த பின்னர், வெளிநடப்புகளை செய்வதாக அறிவித்திருந்தனர். இருப்பினும், தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்த ஆணையைப் புதுப்பிக்க ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வாக்கெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதில் 50 வீதத்தை அவர்கள் பெற வேண்டும். இந்நிலையில்,  100,000 க்கும் அதிகமானோர் வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தபோது, RCN இன் 300,000 உறுப்பினர்களில் 122,000 பேர் […]

தென் அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து அர்ஜென்டீனா கொண்டுவரப்பட்ட கொலைகார விமானம்..

  • June 27, 2023
  • 0 Comments

அர்ஜென்டீனாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் அமெரிக்காவிலிருந்து அர்ஜென்டீனாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 1976ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை அந்நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. ராணுவத்தை விமர்சித்ததால் கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர்(30,000) கடும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பின் விமானத்திலிருந்து கடலில் வீசி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொலைகார விமானம் என அழைக்கப்பட்ட அந்த விமானம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் உறவினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அர்ஜென்டீனாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது . உயிரிழந்தவர்களின் […]

ஆசியா

எல்லைக்குள் வரும் சீன கப்பல்கள்,போர் விமானங்கள் அனைத்தும் அழிக்கப்படும்; தைவான் எச்சரிக்கை

  • June 27, 2023
  • 0 Comments

தங்கள் நாட்டின் சர்வதேச எல்லைப் பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவு நாடான தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக அறிவித்து வருகிறது, இதற்கு தைவான் குடியரசு முழு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு தங்களை சுதந்திர நாடாக அறிவித்து வருகிறது. ஆனால் தைவானின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து சர்வதேச தைவான் கடல் ஜலசந்தியில் சீனா தங்களது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அத்துமீறி நுழைய […]

இலங்கை

அஸ்வெசும உதவி திட்டம் குறித்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன!

  • June 27, 2023
  • 0 Comments

அஸ்வெசும’ நலன்புரி திட்டம் குறித்து  இதுவரை 188, 794 முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் 3304 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், வார நாட்களில் பொதுமக்களும் 1924 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி  தங்களது கருத்துக்களை கூற முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை ‘அஸ்வெசும’ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மக்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் தனிப்பட்ட முறையில் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், […]

இலங்கை

மகாவம்சம் நூல் வரலாற்று சின்னமாக பிரகடனம்

இலங்கையின் மகாவம்சம் நூல் யுனெஸ்கோவினால் வரலாற்று நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் இம்மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்டதாக பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். முன்னதாக தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் வசமுள்ள ஒல்லாந்தர் காலத்துக்கான ஆவணங்கள் மற்றும் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் தொடர்பான ஆவணங்கள் என்பன வரலாற்று சின்னமாக பெயரிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா

சீக்கியர் படுகொலை தொடர்பில் பாக்கிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன்

  • June 27, 2023
  • 0 Comments

பாக்கிஸ்தானில் சீக்கியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்வதற்கு கண்டனம் தெரிவிக்க இந்தியஅரசு டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. இதுதொடர்பான வழக்கை நம்பகத்தன்மையுடன் விசாரித்து மதவிரோதம் காரணமாக அச்சத்துடன் வாழும் சீக்கிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க பாக்கிஸ்தானுக்கு வலியுற்த்தப்பட்டுள்ளது. மன்மோகன்சிங் என்ற 34வயது சீக்கியர் ஒருவர் அன்மையில் ஆட்டோவில் வீடு திரும்பும் போது சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இலங்கை

யாழ். இரத்ததான முகாமில் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர்

  • June 27, 2023
  • 0 Comments

தாங்களாக முன்வந்து இரத்ததானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு எங்களைப் பொறுத்தவரை குறைவாக இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தானங்களிலே சிறந்த தானம் இரத்த தானம். உடல் பாகங்களை தானம் செய்வது கண் தானம் செய்வது போன்ற பல்வேறு தானங்கள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரத்ததானம் வழங்குவதில் தற்பொழுது முழுமையாக நாங்கள் வளர்ச்சி பெறாவிட்டாலும் முன்னேற்றமாக உள்ளது என்பது […]

இலங்கை

வானை நோக்கி 38 தடவைகள் பொலிஸார் துப்பாக்கிச் சூடு! ஏற்பட்ட அமைதியின்மை

நுவரெலியா – ஹங்குரங்கெட்ட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி 38 தடவைகள் சுட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக திரண்டிருந்த சுமார் 200 பேர் கலவரமாகச் செயற்பட்டு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 25ஆம் திகதி ஹங்குரங்கெட்ட தியாதிலகபுர பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 8 […]

You cannot copy content of this page

Skip to content