இலங்கை

சதுப்பு நிலத்தில் இருந்து உடல் உறுப்புகள் கண்டுபிடிப்பு!

பமுனுகம, நீலசிரிகம பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். காணாமல் போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த நபரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது […]

இலங்கை

பெருந்தோட்ட மக்களின் EPF, ETF மீது கைவைக்கப்பட்டுள்ளது, 09 வீத வட்டிக்கும் உத்தரவாதம் இல்லை!

  • July 1, 2023
  • 0 Comments

மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றின் மீது பலவந்தமான முறையில் கை வைக்கப்பட்டுள்ளதாகவும், 09 வீத வட்டி வழங்கப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது எனவும், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு மீதான விவாதம் இன்று (ஜுலை 01) நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”நடுத்தர மக்களின் சேமிப்பை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு துணை போக முடியாது […]

பொழுதுபோக்கு

ரசிகருக்கு விஜய் கைப்பட எழுதிய கடிதம்! அட இப்படியெல்லாம் எழுதியுள்ளாரா?

நடிகர் விஜய் கடந்த ஜூன் 22ம் திகதி அவரது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஒரு நிகழ்ச்சி விஜய் ஏற்பாடு செய்திருந்தார். அது மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு உதவும் வகையில் பல விஷயங்களை செய்து இருந்தனர். இந்நிலையில் விஜய் தனது ரசிகர் ஒருவரை பாராட்டி கடிதம் ஒன்றை கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறார். தனது பிறந்தநாள் அன்று […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பு திட்டம் : நடுநிலை வகிக்கும் மைத்திரி!

  • July 1, 2023
  • 0 Comments

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலை கொள்கையை பின்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர்’ விவாதிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் மட்டுமே உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு தரப்பினரும் இந்தப் பிரேரணைகளை விமர்சித்தால் அதற்கு மாற்று வழியை முன்வைக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். .அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்தப் பணியில் நடுநிலைக் கொள்கையை கடைப்பிடிக்கும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா

பிரான்சில் போராட்டம் தொடர்பாக இதுவரை 13,000 பேர் கைது!

பிரான்சில் போராட்டங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 13,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போராட்டத்தை கட்டுப்படுத்த நேற்றிரவு 45,000 போலீசார் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாரிஸில் கடந்த செவ்வாய்கிழமை 17 வயது சிறுவன் போக்குவரத்து விளக்குகளை வேகமாக ஓட்டியதால் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நான்காவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம்

நீதிமன்றத் தீர்ப்பை மீறி 24,000 பிரித்தானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம்?

ருவாண்டாவிற்கு குடியேற்றவாசிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரித்தானியா மற்றும் ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்கள் அவர்களின் சொந்த நாடுகளிற்கே திருப்பி அனுப்பப்படுவதில் ஆபத்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே ருவாண்டா திட்டத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தப்படும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் இருந்து 24,000 க்கும் […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள்!

  • July 1, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு 476 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 317 பேர் ஆண்கள் எனவும்  மீதமுள்ள 159 பேர் பெண்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சனைகள்,  வேலை வாய்ப்பு மற்றும் நிதிச் சிக்கல்கள்  காதல் உறவுகள் போன்ற காரணங்களுக்காக அதிகளவானோர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. உலகளாவிய ரீதியில்  ஆண் தற்கொலை இறப்புகள் பெண்களின் தற்கொலை இறப்புகளை விட அதிகமாக உள்ளதாக […]

பொழுதுபோக்கு

மீண்டும் வைரலாகும் வருண் – சக்தி ஜோடி.. வருணை “குரங்கா” என திட்டிய சக்தி

  • July 1, 2023
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம். மௌனராகம் சீசன் 1 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மக்கள் லாக் டவுன் காரணமாக அந்த சீரியல் நிறுத்தப்பட்டிருந்தது. பின் மௌனராகம் சீசன் 2 என்று புதிய அத்தியாயத்துடன் சீரியல் வெளிவந்தது மௌனராகம் சீசன் ஓன்னைவிட சீசன் 2-க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இந்த சீரியல் தொடங்கியதில் இருந்தே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்தது. […]

இலங்கை

யாழில் இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்வு

  • July 1, 2023
  • 0 Comments

பொலிஸ் அதிகாரிகள் என்ற ரீதியில் ஊடகவியலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது எப்படி அதே நேரம், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளை நிறைவேற்றுவது எப்படி எந்த முறையில் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிகால் தல்துவே கருத்து தெரிவித்துள்ளார். வடமாகாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன், பொலிஸார் ஊடகங்களுடனும் பொதுமக்களுடனும் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி தவிர்ப்பது என்பது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிகால் தல்துவேயினால் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்தார் அவர். […]

இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மைத்திரி

யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று (01) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். மைத்திரிபால சிறிசேன அவர்களை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட அவர் நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களோடும் கலந்துரையாடினார். சுகாதார அமைச்சராக அவர் இருந்த காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜனாதிபதி காலத்தில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டட தொகுதியையும் அவர் பார்வையிட்டார். […]

You cannot copy content of this page

Skip to content