இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி தொடர்பான விசாரணைகளை சீர்குலைக்கும் சதிகள்?

  • May 11, 2025
  • 0 Comments

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரத்தில் நீதியை கிடைக்க விடாமல் செய்யும் நோக்கில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யுனைட்டட் ஹியூமன் ரைட்ஸ் என்ற மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் பிரதீபா வர்ணகுலசூரிய இது தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளார். ஊடக சந்திப்பொன்றில் இதனை தெரிவித்த அவர், திட்டமிட்ட வகையில், விசாரணைகளைக் குழப்புவதற்கான சதிகளில் இந்த தரப்பினர் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் கற்பித்த பாடசாலையைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் குறித்த சிறுமி தொடர்பான […]

இன்றைய முக்கிய செய்திகள்

பல தசாப்தங்கள் காணாத மோசமான மோதல் – மனவேதனையை வெளிப்படுத்திய பாகிஸ்தான் மக்கள்

  • May 11, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில் அது பல தசாப்தங்கள் காணாத மோசமான மோதல் என்று பாகிஸ்தானிய மக்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள ஒரு சந்தைக்கு வெளியே மக்களைச் சந்தித்துப் பேசியது சர்வதேச ஊடகத்திடம் மக்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். “இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதைத் தவிரப் பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை” என கடைக்காரர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தமது பாதுகாப்பைப் பற்றி கவலையில்லை என்று கூறிய அவர் இந்த மோதல் எப்போது முடியும் என்று யோசிப்பதாக குறிப்பிட்டுள்ளார். […]

செய்தி

இலங்கையில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஐவர் பலி – பலர் படுகாயம்

  • May 11, 2025
  • 0 Comments

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 35க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரன்டிஎல்ல பகுதியில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கதிர்காமத்திலிருந்து நுவரெலியா […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

சண்டை நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் – பதிலடி கொடுக்க உத்தரவிட்ட இந்தியா

  • May 11, 2025
  • 0 Comments

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை பாகிஸ்தான் மீறி எல்லையில் தாக்குதல் நடத்தியது. இந்த சண்டை நிறுத்த மீறலை நிறுத்த பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை இரவு தெரிவித்தாா். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி கொடுக்கவும் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். இந்நிலையில், அமெரிக்க […]

ஆசியா

அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ட்ரம்புக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்

  • May 11, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பிராந்திய அமைதிக்காக அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவத்திற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்த முடிவை எளிதாக்கியதற்காக அமெரிக்காவை […]

வட அமெரிக்கா

சீனாவுக்கான வர்த்தக வரி குறைக்கப்படலாம் – மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட டிரம்ப்

  • May 11, 2025
  • 0 Comments

சீனாவுக்கான வர்த்தக வரி குறைக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெரிவித்துள்ளார். இதனை அவரது சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டுள்ளார். சீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள 145 சதவீமாக வரியை 80 சதவீதத்திற்கு குறைப்பது சரியாக இருக்கும் என்று அவர் கூறினார். எனினும் இறுதி முடிவெடுப்பதை நிதியமைச்சர் ஸ்கோட் பெஸ்ஸண்ட்டிடம விடுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பெஸ்ஸண்ட்டும் வர்த்தகப் பேச்சு நடத்தும் அமெரிக்கத் தலைமை அதிகாரி ஜேமிசன் கிரியரும் சுவிட்சர்லந்தில் சீனத் துணைப் பிரதமர் ஹீ லிபெங்கைச் சந்திக்கவிருக்கின்றனர். அமெரிக்காவின் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

கொழும்பில் மாணவி மரணம் – ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வி என கூறிய பிரதமர்

  • May 11, 2025
  • 0 Comments

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி உயிரிழந்தமை தொடர்பாக பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். ஒரு பிள்ளை உயிரை மாய்க்க முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது […]

செய்தி வட அமெரிக்கா

சூதாட்டத்தில் வாடிக்கையாளர்களின் பணத்தை செலவழித்த அமெரிக்க வழக்கறிஞருக்கு 21 மாத சிறைத்தண்டனை

  • May 10, 2025
  • 0 Comments

லாஸ் வேகாஸில் தனது சூதாட்டப் பழக்கத்தின் அதிகரிப்பால் வாடிக்கையாளர்களின் பணத்தை $8.7 மில்லியன் மோசடி செய்ததற்காக அமெரிக்க வழக்கறிஞர் ஒருவருக்கு 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாரா ஜாக்குலின் கிங் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், கம்பி மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் இந்த தண்டனை வழங்கப்பட்டது. கலிபோர்னியாவைச் சேர்ந்த 41 வயதான ஜாக்குலின் கிங், ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023 க்கு இடையில் ஒரு மோசடித் திட்டத்தில் “பிரபலங்கள், […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

புதிதாக 20,000 அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்ட டிரம்ப்

  • May 10, 2025
  • 0 Comments

டொனால்ட் டிரம்ப் தனது நாடுகடத்தல் கொள்கைகளைச் செயல்படுத்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு 20,000 அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ஆவணமற்ற குடியேறிகளை சுயமாக நாடுகடத்த ஊக்குவிக்கும் நிர்வாகத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஒரு வீடியோவில், டிரம்ப் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதை “முடிந்தவரை எளிதாக்குவதாக” தெரிவித்துள்ளார். தானாக முன்வந்து வெளியேறத் தேர்வுசெய்யும் ஆவணமற்ற மக்களுக்கு அமெரிக்காவிலிருந்து வெளியேறும் விமானங்களுக்கு மத்திய அரசு நிதியளிக்கும், மேலும் “வெளியேறும் போனஸ்” வழங்கும் என்று நிர்வாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

செய்தி வட அமெரிக்கா

போராட்டத்தில் ஈடுபட்ட நியூ ஜெர்சி மேயர் கைது

  • May 10, 2025
  • 0 Comments

நியூ ஜெர்சியின் மேயர், புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டார். நியூ ஜெர்சியின் அமெரிக்க வழக்கறிஞர் அலினா ஹப்பாவின் கூற்றுப்படி, குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்தால் (ICE) நடத்தப்படும் டெலானி ஹாலை விட்டு வெளியேற நியூவார்க் மேயர் ராஸ் பராகா “அத்துமீறி நுழைந்து பல எச்சரிக்கைகளை புறக்கணித்தார்”. பராகாவுடன் மூன்று ஜனநாயக காங்கிரஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்படவில்லை. கட்டிட பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் இந்த வசதி மீறவில்லை […]