இலங்கையில் கடலில் குளித்துக்கொண்டிருந்த நால்வர் நீரில் மூழ்கி மாயம்!
வென்னப்புவ கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது, மற்ற மூவரின் உடல்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் நுவரெலியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.