ஐரோப்பா

உக்ரேன் தலைநகர் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் – 3 பேர் பலி

  • May 25, 2025
  • 0 Comments

உக்ரேன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வொளடிமீர் செலன்ஸ்கீ தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை அடுத்து ரஷ்யா மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது இன்று அதிகாலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளது. உக்ரைனின் கியேவ் மீது ரஷ்யா 250 ஆளில்லா விமானங்கள் மற்றும் 14 ஏவுகணைகளை ஏவியதாகவும் அவற்றில், 6 ஏவுகணைகள் மற்றும் 245 […]

ஐரோப்பா

கொடூரமாக தாக்குதல் நடத்திய ரஷ்யா : பாதுகாப்பிற்காக போர் விமானங்களை ஏவிய போலந்து!

  • May 25, 2025
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தற்காப்பு நடவடிக்கைக்காக நேட்டோ போர் விமானங்களை ஏவியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் நடவடிக்கை இன்று (25.05) காலை இடம்பெற்றதாகவும் இதில் குழந்தைகள் உட்பட குறைந்தது எட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரவு நேர தாக்குதல்களில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர், டொனால்ட் டிரம்பின் அமைதி நடவடிக்கைகளில் புதினுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைக் காட்டும் தெளிவான ஆதாரமாக இது தோன்றுகிறது புதினின் காட்டுமிராண்டித்தனமான […]

இந்தியா

இந்தியாவின் டெல்லிக்கான விமான சேவைகள் பாதிப்பு

  • May 25, 2025
  • 0 Comments

இந்தியாவின் டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்குத் தயாரான சில விமானங்கள் தாமதம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில மணி நேரங்களுக்குப் பின்னர் தங்களது விமானப் போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாக, இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தி

ஹமாஸ் தாக்குதலில் மருத்துவரின் ஒன்பது பிள்ளைகள் மரணம்

  • May 25, 2025
  • 0 Comments

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 79 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒரு மருத்துவரின் 10 பிள்ளைகளில் ஒன்பது பேர் அடங்குவர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாசர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான அலா நஜ்ஜார், அந்த நேரத்தில் பணியில் இருந்தார், மேலும் அவரது வீடு தீப்பிடித்து எரிந்ததை அறிந்ததும் வீட்டிற்குச் சென்றுவிட்டார். தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நஜ்ஜாரின் […]

இலங்கை

மட்டக்களப்பில் மதிய உணவுப் பொதி பெற்ற சட்டத்தரணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • May 25, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு நகரின் உணவகம் ஒன்றில் வாங்கிய மதிய உணவுப் பொதி ஒன்றில் புழு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு, சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று முறைப்பாடு அளித்துள்ளார். இதையடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக குறித்த உணவகத்தைச் சோதனையிட்டு, அங்கு மனித பாவனைக்கு ஒவ்வாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன், குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், மீட்கப்பட்ட மனித பாவனைக்கு ஒவ்வாத பொருட்களைக் கொண்டு உணவு தயாரிக்க […]

செய்தி

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • May 25, 2025
  • 0 Comments

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் நடவடிக்கை காரணமாக, இன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையிலும், கோட்டே, கடுவலை, பத்தரமுல்லை, கொலன்னாவை, கொட்டிக்காவத்தை, முல்லேரியா, ஐ.டி.எச். பிரதேசம், மஹரகம, தெஹிவளை, கல்கிஸ்ஸை, மொரட்டுவை, மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு நாடு கடத்தப்படும் வெளிநாட்டவர்கள்

  • May 25, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் புகலிட அமைப்பு குறித்த நிச்சயமற்ற நிலை காரணமாக சில அகதிகளை மீண்டும் கிரேக்கத்திற்கு நாடுகடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஜெர்மனி பெருமளவில் நிறுத்தி வைத்திருந்தது. ஏற்கனவே கிரேக்கத்தில் புகலிடம் கோருபவர்களாக பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜெர்மனிக்கு பயணம் செய்த அகதிகளை நாடு கடத்துவதற்காக ஜெர்மனி இதனை மீண்டும் ஆரம்பித்துள்ளது. குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள், வயதான ஆண்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் போன்றோர் மட்டும் நாடுகடத்தலில் இருந்து விலக்கப்படுவார்கள். கடந்த மாதம் […]

ஆசியா

பாகிஸ்தானை உலுக்கிய புழுதிப் புயல் – லாகூரில் 8 பேர் உயிரிழப்பு

  • May 25, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் – லாகூரில் வீசிய கடும் புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் வீசிய புழுதிப் புயலால் ஏராளமான மரங்கள் அடியோடு விழுந்தன. இது தொடர்பாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்ததாலும், மக்கள் பாதுகாப்பற்ற இடங்களில் இருந்ததாலும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் தவிர 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டென்மார்க் எடுத்த தீர்மானம் – 70 ஆக உயர்ந்த ஓய்வூதிய வயது

  • May 25, 2025
  • 0 Comments

ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டென்மார்க் அரசாங்கம் தனது ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு 81 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்தனர். புதிய சட்டம் 1970 டிசம்பர் 31க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போதைய ஓய்வூதிய வயது சுமார் 67 ஆக இருந்தாலும், 1967 ஜனவரி 1 பிறந்தவர்களுக்கு அது 69 வரை உயரக்கூடியதாகும். இந்த உயர்வு, எதிர்கால சந்ததிகளுக்கு நிலையான சமூக நலன்கள் […]

உலகம்

24 மணி நேரத்தில் 2-வது முறையாக எக்ஸ் தளம் முடக்கம்! அதிர்ச்சியில் மஸ்க்

  • May 25, 2025
  • 0 Comments

எலான் மஸ்க்குக்கு சொந்தமான எக்ஸ் தளம் நேற்று மாலை திடீரென முடங்கியது. இந்திய நேரப்படி 6 மணிக்கு பின்பு நீண்ட நேரம் முடங்கியது. இதனால், சமூக வலைதளப் பயனர்களால் செயல்பட முடியவில்லை. சர்வதேச அளவில் எக்ஸ் தளம் வெள்ளிக்கிழமை முடக்கத்தை சந்தித்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று மீண்டும் இந்த தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய தகவல்களைப் பதிவேற்ற முயற்சி செய்யும்போது, “ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் பதிவேற்ற முயற்சிக்கவும்” என்ற நிலைத்தகவலையே காட்டுகிறது. முன்னதாக நேற்றும் சர்வதேச […]

Skip to content