சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 04 ஹாங்காங் ஆர்வலர்கள் விடுதலை!
பெய்ஜிங்கில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (29.04) விடுக்கப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமற்ற முதன்மைத் தேர்தலில் தங்கள் பங்களிப்பிற்காக 47 ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் கிளாடியா மோ, ஜெர்மி டாம், குவோக் கா-கி மற்றும் கேரி ஃபேன் ஆகியோர் அடங்குவர்.
பெய்ஜிங் திணித்த சட்டத்தின் கீழ் அவர்கள் நால்வரும் தண்டனை பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





