செய்தி வட அமெரிக்கா

நியூயோர்க்கில் யூத நிலையத்தை தாக்க திட்டமிட்டவர் கனடாவில் கைது

அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள யூத நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பாகிஸ்தானிய நாட்டவர் கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தந்து அந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

கனடாவில் வசிக்கும் 20 வயது Muhammad Shahzeb Khan , புரூக்லின் நகரில் இருக்கும் யூத நிலையத்தில் பெரிய அளவில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் கிளர்ச்சிப் படை இஸ்ரேல் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்த ஒராண்டுக்குப் பிறகு, கிட்டத்தட்ட அதே நாளில் அந்த நபர் நியூயார்க்கில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது.

தாக்குதலை நடத்த அவர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய திட்டமிட்டார்.

கனடாவில் இருக்கும் அமெரிக்க எல்லைக்குத் 19 கிலோமீட்டர் தொலைவில் அவர் கைது செய்யப்பட்டார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content