சீனாவில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவரை சோதனையிட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி

சீனாவில் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவரின் வயிற்றில் இருந்து பற்தூரிகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
64 வயது முதியவரின் குடலில் சிக்கியிருந்த பற்தூரிகையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அவரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் வெளியானது. 12 வயதில் தெரியாமல் பற்தூரிகையை விழுங்கிவிட்டதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தால் திட்டுவார்கள் என்று பயந்து அமைதியாக இருந்ததாக கூறினார்.
எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்து, 80 நிமிடங்களில் 52 ஆண்டுகளாக சிக்கியிருந்த 17 சென்டிமீட்டர் நீளமுள்ள பற்தூரிகையை அகற்றியுள்ளனர்.
குடல் திசுக்களை துளைத்து ஓட்டை ஏற்படுத்தியிருந்தால், உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்று கூறிய மருத்துவர்கள், குடல் வளைவில் பற்தூரிகை சிக்கியிருந்ததால் பிரச்சனை எழவில்லை என்றனர்.
(Visited 2 times, 2 visits today)