ஆசியா செய்தி

சீனாவில் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – அதிகரிக்கும் திருமணமாகாத ஆண்கள்

சீனாவில் பெண்களை விட 30 மில்லியன் ஆண்கள் அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பெண்களின் எண்ணிக்கை குறைந்தமையினால் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை அங்கு அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின், ஒரு குழந்தை கொள்கையின் பின்விளைவுகளே இதுவென கூறப்படுகிறது.

1980 ஆம் ஆண்டு மக்கள் தொகை ஒரு பில்லியனை நெருங்கியபோது சீன அரசாங்கத்தால் இந்தக் கொள்கை நிறுவப்பட்டது.

அதிகமான மக்களைக் கொண்டிருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற அச்சத்தின் மத்தியில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் குறித்த திட்டம் தற்போது திருமணத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் குறித்த திட்டத்தின் விளைவாக மிகப்பெரிய பாலின ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.

சீனா, இப்போது அதன் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் வயதான மக்கள் தொகை குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content