இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இஸ்ரேலுக்கு இலங்கை பணியாளர்களை அனுப்புவது குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை பணியாளர்களை தொழில் நிமித்தம் இஸ்ரேலுக்கு அனுப்புவது குறித்து, எதிர்வரும் நாட்களில் தீர்மானம் எட்டப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில், தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் இஸ்ரேலில் தற்போதைய நிலைமைகள் குறித்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறித்த இரண்டு நாடுகளிலும் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானிலிருந்து 2 இலங்கையர்கள், தூதரக உறுப்பினர் ஒருவர் மற்றும் மாணவர் ஒருவரும் ஈரானின் எல்லையைக் கடந்து துருக்கிக்குப் பயணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மேலும் 2 இலங்கையர்கள் டுபாய்க்கு பயணிப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content