இலங்கை செய்தி

இலங்கையில் முட்டை விலை தொடர்பில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!

சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொறிமுறை ஒன்றை அமைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இடைத்தரகர்கள் முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் பெரும் இலாபத்தை பெறுகின்றனர்.

இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சந்தையில் தற்போது முட்டை ஒன்று 28 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கடந்த சில மாதங்களாக, முட்டை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. முட்டை விலை உயர்வுக்கு இடைத்தரகர்களின் செயல்பாடுகளும் ஒரு காரணம் என்று பல தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மேலும் முட்டை விலை அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க பொறிமுறை ஒன்றை அமைக்க முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content