ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவரின் விசா இரத்து – நாடு கடத்த நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் படிக்கும் சர்வதேச மாணவர் ஒருவரின் மாணவர் விசாவை இரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்குக் காரணம், குறித்த மாணவர் வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கும் மேலாக Uber சேவைகளைப் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

அந்த மாணவர் சமீபத்தில் அடிலெய்டு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார், அங்கு அவரது கையடக்க தொலைபேசி ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் சரிபார்க்கப்பட்டது.

சந்தேக நபர் மாணவர் விசா தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலிய மாணவர் விசா விதிகளுக்கமைய, ஒரு சர்வதேச மாணவர் இரண்டு வார காலத்தில் அதிகபட்சமாக 48 மணிநேரம் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்.

சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இருப்பினும், எதிர்காலத்தில் அவர் தனது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி