ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள மற்றம் – நிரந்தரமாக குடியேறிவரும் இந்தியர்கள்

ஆஸ்திரேலியாவின் சாதனை மக்கள்தொகை வளர்ச்சிக்கு இந்திய குடியேற்றம் பெருமளவில் பங்களித்துள்ளதாக புதிய அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

அதிக வேலை வாய்ப்பு, உயர்கல்வி மற்றும் நிம்மதியான வாழ்க்கை முறையை எதிர்பார்த்து அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 1.4 பில்லியன் பொருளாதார சந்தையைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் பெரும்பாலும் இந்திய குடியேற்றத்தை ஏற்றுக்கொள்கிறது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜூன் 2022 நிலவரப்படி, ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை 753,520 ஆக இருந்தது, இது 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்.

பிரித்தானியாவுக்கு அடுத்தபடியாக, இந்திய மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக ஆஸ்திரேலியா கருதப்படுகிறது.

பல இந்தியக் குடியேற்றவாசிகள் இந்த நாட்டில் நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதற்காக மாணவர் விசாவைப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.

எனினும், தற்போதைய அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் மாணவர் வீசா விதிகளை கடுமையாக்கியதையடுத்து, அந்த நடவடிக்கைகளுக்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2022 நிதியாண்டில், ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு சுமார் 19.3 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான ஒரு வருடத்தில், மதிப்பு 33 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், MATES எனப்படும் புதிய பைலட் திட்டம் இந்தியாவில் இருந்து இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதை எளிதாக்கியுள்ளது.

இந்த திட்டம் இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வரை வாழவும் வேலை செய்யவும் வாய்ப்பளிக்கிறது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content