அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம் விபத்து : கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?

அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் வழியில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா பயணிகள் ஜெட் விமானத்தின் விமானிகள் அனுப்பிய கடைசி தகவல் வெளியாகியுள்ளது.
53 பிரிட்டிஷ்காரர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவசரகால சூழ்நிலையைக் குறிக்கும் வகையில், குழுவினர் “மேடே” என்ற துயர அழைப்பை விடுத்தனர். இருப்பினும், ஆரம்ப எச்சரிக்கைக்குப் பிறகு விமானத்திலிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
விமான கண்காணிப்பு சேவையான Flightradar24, விமானம் வான்வழியாகப் பறந்த சில நொடிகளில் அதன் சிக்னலை இழந்ததாகத் தெரிவித்துள்ளது. “விமானத்திலிருந்து வந்த சிக்னல் உள்ளூர் நேரப்படி காலை 10:08 மணிக்கு 625 அடி உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இழந்தது” என்று தளம் ட்வீட் செய்துள்ளது.
கேள்விக்குரிய விமானம் VT-ANB இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விமானம் லண்டன் கேட்விக் நோக்கிச் சென்று கொண்டிருந்தது, இன்று மாலை 6:25 மணிக்கு வந்து சேரவிருந்த நிலையில் குறித்த விபத்தை எதிர்கொண்டுள்ளது.