இலங்கை செய்தி

இலங்கை முழுவதும் விசேட சுற்றிவளைப்புகள்

இலங்கையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 1,500 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள 365 சுகாதார வைத்திய பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டார்.

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இதன்போது பரிசோதிக்கப்படவுள்ளன.

உணவு பதப்படுத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை என்ற மருத்துவ அறிக்கையை வைத்திருப்பது கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content